சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 18 ஜூன், 2025

எழுத்தாளர்கள் செத்துப் போனால்தான் பொதுமக்களுக்குத் தெரிகிறது. சில அமைப்புகள் விருது பெற்றால்தான் தெரிகிறது. என் உலகம் சின்னதுதான் 'வேர்கள்' திருப்பூர்; மண்ணரை மூளிக்குளத்தை பராமரித்து வரும், 'வேர்கள்' அமைப்புக்கு, தமிழக அரசு, 'சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர்' விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் நடந்த, உலக சுற்றுச்சூழல் தினவிழாவில், திருப்பூரை சேர்ந்த 'வேர்கள்' அமைப்புக்கு, 'சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர்' என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் சுப்ரியாசாகு, விருதையும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலையையும் வழங்கினார். 'வேர்கள்' அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள்சந்தீப், சதீஷ்குமார் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். மூளிக்குளம் பராமரிப்பு மண்ணரை மூளிக்குளத்தை, வேர்கள் அமைப்பினர், நீண்ட நாட்களாக பராமரித்து வருகின்றனர். குளம் மற்றும் அணைக்கு தண்ணீரை எடுத்து வரும் ராஜ வாய்க்காலையும் பராமரித்து வருகின்றனர். அதனை பாராட்டியே, விருது வழங்கி, தமிழக அரசு கவுரவித்துள்ளது. வேர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: அமைப்புகளுக்கும் தாய் அமைப்பாக இருந்து வழிகாட்டி வருகிறது. அதன்படியே, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கிறோம். வெற்றி அமைப்பு, ஆண்டிபாளையம் குளத்தை பராமரிப்பது போல், நாம் சிறிய மூளிக்குளத்தை பராமரிக்கலாம் என, இளைஞர்கள் இணைந்து வேர்கள் அமைப்பை துவக்கினோம். மாவட்ட நிர்வாகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தொழில் அமைப்பினர் பங்களிப்புடன், குளம் மற்றும் வாய்க்காலை பராமரித்து வருகிறோம். எங்கள் தொடர் முயற்சியால், கழிவுநீர் குளத்தில் கலப்பதை தடுக்க, 2.90 கோடி ரூபாயில், உள்ளூர் திட்டக்குழும நிதியில், கால்வாய் பணி நடக்கப்போகிறது; ஆகாயத்தாமரை படராமல், குளம் துாய்மையாக பராமரிக்கப்படும். எதிர்கால சந்ததிக்கான சொத்து இளைஞர்கள் முயற்சி எடுத்து, நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும்; அது, நமது எதிர்கால சந்ததியினருக்கான சொத்து; பாதுகாப்பாக பராமரித்து அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன், குளம் பராமரிப்பு பணியை செய்து வருகிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள், 'வேர்கள்' அமைப்பு. 0 திருப்பூர்; திருப்பூர் சாய ஆலை கள் சந்தித்து வரும் சவால்கள் தொடர்பாக, உலக சுற்றுச்சூழல் தினத்தில் வெளியான 'தினமலர்' நாளிதழ் செய்திக்கு, சாய ஆலை உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி, பொதுநல விழிப்புணர்வுக்காக, 'தினமலர்' நாளிதழ் திருப்பூர் இணைப்பில், ஒரு பக்க அளவில்செய்திகள் வெளியாயின. இதில், சாய ஆலைகள் சந்திக்கும் சவால்கள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட சாதனை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. சாய ஆலைகளின் சவால்கள் மற்றும் தீர்வுகளை எதிர்நோக்கி, 'பசுமை அங்கீகாரம் வேண்டும் - எதிர்நோக்கும் சாய ஆலைகள்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. dinamalar 1'பசுமை அங்கீகாரம் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியுள்ளதாவது: 'தினமலர்' நாளிதழில், 'பசுமை அங்கீகாரம் - எதிர்நோக்கும் சாய ஆலைகள்' என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை மிக அருமையாக உள்ளது. அதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு, சாய ஆலைகள் சார்பில், நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். சாய ஆலைகள் பின்பற்றி வரும் 'பூஜ்ஜிய நிலை' சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் ஏற்படக்கூட மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை பகிர்ந்துகொள்ள, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்' என்ற எங்களது வேண்டுகோளையும், முன்வைத்துள்ள 'தினமலர்' நாளிதழுக்கு, மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி இந்தசெய்தி வெளி யானது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதுடன், சாய ஆலைகளின் செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் நம்புகிறோம். இவ்வாறு, காந்திராஜன் கூறினார்.
கோவையில் இந்த வாரம் சென்ற இரு இடங்கள் பற்றி..RPS 1. கோவை போத்தனூரில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு தற்போது நினைவிடமாக உள்ளது. இது, காந்தி கோயம்புத்தூர் விஜயத்தின் போது தங்கியிருந்த ஓடு வேயப்பட்ட வீடு. அந்த வீடு நூலகம் மற்றும் புகைப்படத் தொகுப்புடன் கூடிய நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவிடம், மகாத்மா காந்தியின் பயணம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான பங்களிப்பின் அடையாளமாக உள்ளது. இளைஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளை உள்ளடக்கியதன் மூலம், மக்கள் மத்தியில் தலைமைத்துவ சிந்தனையை இயக்கும் ஒரு "செயலில் உள்ள மையமாக" அவர் நினைவுச்சின்னத்தை கருதுகிறார். இது 1934 பிப்ரவரி 6 அன்று கோயம்புத்தூர் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி, தேசியத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, போத்தனூரில் ஜி.டி. நாயுடு குடும்பத்திற்குச் சொந்தமான ஓடு வேயப்பட்ட வீட்டிற்கு வந்தபோது இரவு 11 மணியளவில் நடந்தது. • டிஜிட்டல் மாவட்ட களஞ்சிய விவரம் மொழிபெயர்ப்பானது — 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி கோயம்புத்தூரில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி, தேசியத் தலைவர்களைச் சந்தித்த மகாத்மா காந்தி, போத்தனூரில் இரவு 11 மணியளவில் ஜி.டி. நாயுடு குடு... cmsadmin.amritmahotsav.nic.in • மகாத்மா காந்தி தங்கியிருந்த கோயம்புத்தூர் ... மொழிபெயர்ப்பானது — மகாத்மா காந்தி தங்கியிருந்த கோயம்புத்தூர் இல்லம் தற்போது நினைவிடமாக உள்ளது கோயம்புத்தூர் விஜயத்தின் போது காந்தி இரண்டு நாட்கள் தங்கியிருந்த கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ஓடு வேயப்பட்ட ... thehindu.com 2. கல்லாறு பள்ளியில் உள்ள இவரின் சிலை அபூர்வமானது. கோவை செட்டிபாளையம் சாலையில் லோட்டஸ் உள்ளது. சுவாமி சச்சிதானந்தா லோட்டஸ் கோவில் என்பது, ஸ்ரீ சுவாமி சச்சிதானந்தாவால் நிறுவப்பட்ட ஒரு உலகளாவிய ஆலயம். இது, யோகாவை ஒருங்கிணைத்து, உலகளாவிய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக, அமெரிக்காவின் வர்ஜீனியாவில், யோகவில் ஆசிரமத்தில் அமைந்துள்ளது. கோவிலின் சிறப்பம்சங்கள்: • உலகளாவிய ஆலயம்: இந்த ஆலயம், அனைத்து மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட மக்களையும் வரவேற்கும் ஒரு பொதுவான ஆன்மீக தளமாக விளங்குகிறது. • சுவாமி சச்சிதானந்தாவின் யோகம்: இந்த ஆலயம், சுவாமி சச்சிதானந்தாவின் யோகா போதனைகள் மற்றும் ஆன்மீக பார்வையை பிரதிபலிக்கிறது. • 108-ஐ மையமாகக் கொண்ட அமைப்பு: கோவிலின் அளவீடுகள், ஆன்மீக எண் கணிதத்தில் புனிதமான 108 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. • பிரதிபலிப்பு மற்றும் தியானம்: இந்த ஆலயம், தனிநபர்கள் தியானம் மற்றும் ஆன்மீகப் பிரதிபலிப்பு செய்வதற்காக ஒரு அமைதியான இடமாக உள்ளது. • மத நல்லிணக்கம்: இந்த ஆலயம், மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாக விளங்குகிறது. • யோகாவில்லி ஆசிரமம்: இது யோகாவில்லி ஆசிரமத்தில் அமைந்துள்ளதால், யோகா மற்றும் ஆன்மீகப் பயணங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முக்கியமான மையமாக விளங்குகிறது. google 0 தூரிகை சின்னராஜ் அவர்களின் நண்பர் கார்த்திகேயன் இதன் பொறுப்பாளராக உள்ளார்.பல விசயங்களைச் சொன்னார் விரிவாக . அது பற்றி இன்னொரு பதிவில் ..சுப்ரபாரதி
சுப்ரபாரதிமணியன் மூன்று நாவல்கள் எப்படி சுற்றுச்சூழல் பிரிவில் எப்படி இடம் பிடிக்கின்றன இயற்கை சார்ந்த விசயங்களை மனதில் கொள்வதும் அதை விவரித்துக்கொள்வதும் மட்டுமே சுற்றுச்சூழல் படைப்புகள் என்ற பிரிவு, அக்கறைக்குள் வருவதில்லை. இயற்கையை, அதன் சமநிலையைக் குலைக்கும் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதாலேயே கூட சில படைப்புகள் அவை சுற்றுச்சூழல் படைப்புகள் ஆகின்றன என்று மேற்கத்திய சுற்றுச்சூழல் வாதிகள் சமீபத்தில் எழுதிய பல ஆய்வுகளும் தரகவுளும் சொல்கின்றன அந்த வகையில் சுப்ரபாரதிமணியன் மூன்று நாவல்கள் சுற்றுச்சூழல் பிரிவில் இடம் பிடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் பழைய இலக்கியங்களும் அவை வெளிப்படுத்தும் சுற்றுச்சூழல் இயற்கை சார்ந்த விஷயங்களும் மனதில் வந்து கொண்டே இருக்கும். பல இலக்கியங்கள் இயற்கையையும் அதன் வலிமையும் சொன்ன இயற்கையை பற்றி விரிவாக சொல்லாமல் தமிழ் சமூகம் பற்றி இலக்கியம் சென்றதில்லை. தொல்காப்பியம் சிலப்பதிகாரம் பத்துப்பாட்டு துவங்கி பல விஷயங்கள் அப்படித்தான் இருக்கின்றன. தமிழில் திணை என்று இருப்பதும் அவற்றின் தனி அடையாளமாக மரம்., பறவை, விலங்கு, பூ, சிறு தெய்வம் என்ற இருப்பதும் இதற்கு வலு சேக்கிறது பழைய இலக்கியங்களில் காணப்படும் சமூக வாழ்க்கை உன்னதமாக இருப்பதாக தோன்றுவதன் காரணம் அப்போதைய சுற்றுச்சூழல் விஷயங்களும் இயற்கை சார்ந்த விஷயங்கள் மனித வாழ்க்கைக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. காரணம் இயற்கையை சிதைக்காமல் வழிபடும் தன்மை அப்போது இருந்திருக்கிறது. இன்று விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் வளர்ந்து இயற்கையை கேடுகளை தருகிற போது பல வகைகளில் அந்த வகை இலக்கியங்கள் ஆறுதலாகத்தான் இருந்திருக்கின்றன. இலக்கியம் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கிறது அவை சமகாலத்தோடும் பயணிக்க வேண்டும் என்பது தான் முக்கியம் பலவகை விஷயங்களை பற்றி இலக்கியங்களில் பேசுகிறோம் கிராம வாழ்க்கை, வறுமை, பிற்பட்ட மக்களின் வாழ்க்கை என்று பல விஷயங்கள் பல்வேறு இலக்கிய வகையில் சொல்லப்படுகின்றன, அதை தாண்டி சுற்றுச்சூழலை பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது, இந்த இலக்கிய விஷயங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி விட முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் இலக்கிய படைப்புகளில் இவை தரப்படுகிறது. அவை தரும் மாற்றங்களை நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். நாம் இயற்கையை கண்டு பயப்பட ஆரம்பித்து விட்டோம் அது தந்த பல எச்சரிக்கைகளும் பலனில்லாமல் போய்விட்டன அது இப்போதைக்கு காலநிலை மாற்றத்தையும் மோசமான வாழ்க்கையும் கொண்டு வந்து விட்டது. அதனால் மக்களை இடம்பெறச் செய்து விட்டது இந்த சூழலில் இந்த இடம் பெயரும் வேதனையையும் இயற்கைக்கான பாதிப்புகளையும் சுப்ரபாரதி மணியனின் நாவல்கள் பெரும்பாலும் சொல்கின்றன. இயற்கை பற்றி யோசிப்பதற்கும் நுகர்வு கலாச்சாரத்தின் அதீத தன்மை பற்றிச் சொல்வதற்கும் அவருடைய படைப்புகள் பயன்படுகின்றன. அரசியல் தத்துவ விஞ்ஞான ரீதியான படைப்புகளை தாண்டி பல்வேறு சூழலில் சூழலியல் பாதுகாப்பு சார்ந்த அக்கறை முன்வைக்க சுப்ரபாரதிமணியன் படைப்புகள் விழிப்புணர்வு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறன .ஒரு படைப்பின் வெற்றி என்பது அது மக்களுக்கும் விழிப்புணர் ஊட்டவும் வாசல்களைத் திறந்து வைக்க வேண்டும். அந்த விஷயங்களில் சிந்தனைகளை மனக் களத்தில் கொண்டு செல்லவும் ஆழ்மனதில் பல துன்பங்களை உருவாக்கவும் பயன்படுவதாகும். அப்படித்தான் அவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நாவல்கள் பயன்படுகின்றன. அதற்கு தமிழின் சில சாத்தியங்களும் உதவுகின்றன. இப்போதைய காலகட்டத்தில் எழுத்தும் சொற்களும் பேச்சை விட காட்சிகளாகச் சொல்லப்படும் தன்மை என்பது முக்கியமாக இருக்கிறது. அந்த தன்மைக்கு அவர் படைப்புகளும் பயன்படுகின்றன அவையெல்லாம் காட்சிகளாக கூடவே வருகின்றன என்பதும் முக்கியம் 1 திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன். சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப்படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார் –பிரபஞ்சன் 2 வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான 'நீர்த்துளியை' வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன். நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம். சாராம்சத்தில் இந்தத் தனித்தன்மையை இயல்பாகப் பெற்றிருக்கும் அவர் தன்னுடைய அனுபவ எல்லைகளைக் கடந்து சென்று வாழ்க்கையை மதிப்பீடு செய்து அதற்குக் கலை வடிவம் கொடுக்க முனைவதில்லை. தெளிவான நீரோட்டத்தை ஆர்வமுடன் கவனித்து மகிழ்ச்சியடையும் ஒருவரைப் போல அவர் வாழ்க்கையை ஒரு வித அக்கரையுடன் மௌனமாகக் கவனிப்பதை அவரின் படைப்புக்களின் வாயிலாக உணர்கிறோம். மனச்சிதைவுகளுக்கு உள்ளாகித் தவித்து விகாரமடையும் விசித்திரமான மனிதர்களின் மனப் போக்குகளுக்கு இடமளிக்கும் கலைக்கண்ணோட்டம் அவரிடம் இல்லையென்றே கொல்லலாம். வாழ்வதற்காகவே மனிதர்கள் பிறந்து, வளர்கிறார்கள். கால வெளியில் ஒளிக் கீற்றுக்களை விசிறிக் கொண்டே வாழ்க்கை குறித்த கேள்விகளே எழுப்பிவிட்டு மறைந்து போகிற மனிதர்களை அவருடைய படைப்புக்களில் வெளிப்படையாகக் காண முடிகிறது. இதுதான் அவருடைய தனித்தன்மை வாய்ந்த கலை வெளிப்பாடாக இருந்து வருகிறது. அடக்கமும், ஆழ்ந்த மௌனமும், இலேசான புன்னகையும் கலந்த தன்னுடைய கலை ஆளுமையை அவருக்கே உரிய தனி மொழியில் அவர் வெளிப்படுத்துகிறார். -சி ஆர் ரவீந்திரன் விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது. இந்த நாவல் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கலைப்பாங்குடன் சொல்வது என்பதிலும் பொருள் காரணமாகவும் முக்கியத்துவம் பெறுகிறத. நவீனத்திற்குப் பின் எனப்படும் உத்தியில், கதை முன்னேறுவது போல் தோன்றாமலே முன்னேறும் வகை ஒன்றுண்டு. இதை இடைவெளி வழி (Spatial form) என்பார்கள். பல அனுபவங்கள் திட்டுத்திட்டாகத் தரப்படும். ஒன்றுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளும்படியான தொடர்ச்சி இருப்பது போல் தோன்றாது. ஆனால் புள்ளிகள் சேரச்சேர கோலத்தின் சொரூபம் தெரிவது போல் சில நேரங்களில் பல மனிதர்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளும்போது, கதாசிரியரது நோக்கம் புரியும். சுப்ரபாரதிமணியன் இந்த எழுத்து நடையை சிறப்பாகக் கையாண்டிருப்பதால் நம் சிந்தனைகள் நெஞ்சை நெருடுவதேயன்றி, மனிதாபிமானத்துடன் நாம் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. நாதனியல் ஹாதர்ன் எனும் அமெரிக்க நாவலாசிரியரின் ரப்பாச்சினியின் மகள் எனும் சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது. ரப்பாச்சினி விஷ மருந்துச் செடிகளை வளர்க்கிறான். இவனது மகள் பியேட்ரிஸ் விஷமயமான தோட்டத்தில் வளர்வதால் இயற்கையாகவே விஷக்கன்னி ஆகிறாள். அவளை யாரால் மணக்க முடியும்? அந்த விஷ மலர்களால் கொத்தப்பட்டு விஷம் உடலில் ஊறிப்போன மாணவன் சியோவன்னியால் தான் மணக்க முடியும். இந்தியாவின் ஒரு பாகமாக இருந்தாலும் ரப்பாசினியின் தோட்டம் போல் தனிப்பட்டுப் போயுள்ள திருப்பூரைப் பற்றிய சாயத்திரையில் செஸ் ஆட்டம், வியாதியில் தவிக்கும் நாய் எனப் பல உருவகங்கள், சாதிக் கலவரங்கள், வரதட்சிணைப் பிரச்சனைகள், நொய்யல் ஆறு சாக்கடையாகவும் வைகுந்தக் கிணறு குப்பைக் கூடாரமாகவும் ஆகிவிட்ட பயங்கரம் போன்ற உண்மைகள்; குடிதண்ணீர் காணாமற் போய்விட்ட அனுபவம் கூட பாக்கியில்லையோ எனும்படி ஆசிரியரின் கருடப் பார்வை, திருப்பூர் தொழிலாளிகளைக் கவனிக்கிறது. அவர்கள் குழந்தைகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறது. 1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The Silent Spring) நூல் தந்த அதிர்ச்சியில், மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப்ரபாரதிமணியனும் அப்படியொரு அதிர்ச்சி தந்திருக்கிறார்.- பிரேமா நந்தகுமார் திருப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது நொய்யல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜீவ நதியும், அதன் கரையில் உருவாகி வெற்றிலைக்கும், தாழம்பூவுக்கும், விதவிதமான கீரை காய்கறிவகைகளுக்கும் பெயர் பெற்று விளங்கிய சின்னஞ்சிறிய திருப்பூர் நகரமும், விடுதலைப் போர்க்கொடி கீழே விழாமல் தன் இன்னுயிரில் தாங்கிய திருப்பூர் குமரனும் நினைவுக்கு வருவார். மக்களைக் காந்தமாய்க் கவரும் விதவிதமான பின்னலாடைகள் நினைவுக்கு வரும். புதிதாய் முளைத்தெழும் வண்ண வண்ணக்கட்டிடங்களும் நினைவுக்கு வரும். இம்மாதிரியான கவர்ச்சிமிக்க எண்ணத் திரைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் உள்ளே தெரிவதென்ன? சாயச் சாக்கடையாகச் சிறுத்துக் கொண்டிருக்கும் நொய்யல் நதி. சாயப்பட்டறைக் கழிவுகளால் விஷமாகிக் கொண்டிருக்கும் தெருக்கள். மனிதனின் மொத்த வாழ்க்கையையே சூதாட்டம் ஆக்கி, மனித மதிப்புகளை வெளிறி வண்ணமிழக்கச் செய்யும் பனியன் தொழில்-இந்தச் சூதாட்டத்தில் கணம்தோறும் வெட்டுப்பட்டுக் கல்லறைக்குப் போகும் ராஜா, ராணி, யானை, குதிரைகள், சேவகர்கள்: இவைகளை மாற்றி மாற்றிக் காட்சிகளாகப் பக்கம் பக்கமாக வரைந்து காட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன் தன் சாயத்திரை நாவலில். - பொன்னீலன் அரை நூற்றாண்டு இலக்கிய இயக்கம் திருப்பூரின் இலக்கிய முகம் சுப்ரபாraதிமணியன். அவரது கதைக்களங்கள் தமிழ்நாட்டை தாண்டி விரிந்தவை என்ற போதும் ஒரு செயல்பாட்டாளராக திருப்பூர் அவரது எழுத்து இயக்கமும் மேற்கொண்டது . அவசர காலகட்டத்தை பற்றிய சுதந்திர வீதியில் என்ற சிறுகதையிலிருந்து நவீன இலக்கியத்தில் அவரது பயணம் தொடங்கியது. இதுவரை 110க்கும் மேற்பட்ட நூல்கள், இடைவிடாத கனவு சிற்றிதழ் வெளியீடு என்று தனிநபர் இயக்கமாக வெற்றிகரமாக புலிவால் பிடித்துக் கொண்டிருப்பவர். தமிழ் இலக்கிய சூழலில் நவகால அரசியல் குறித்து தொடர்ந்து உரையாடி வருவோர். கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவரின் நேர்காணல்களை பொன் குமார் தொகுத்துள்ளார். ஒளிவட்டங்களை தவிர்க்கும் சுப்ரபாதி மணியன் தனது கருத்துக்களை இயல்பாக பகிர்ந்து கொண்டு உள்ளார். சமூக பாதுகாப்பு இல்லாத தொழிலாளர் முறையே கொத்தடிமைத்தனம் என்ற நோக்கில் இருந்து திருப்பூரின் வளர்ச்சியைஅவர் பார்க்கிறார். இட ஒதுக்கீடு, தாய் மொழி கல்வி, சூழலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். மனசாட்சியோடும் சமூகப் பொறுப்பணவோடும் இங்குவது தான் எழுத்தாளின் வெற்றி. இலக்கியத்துறையில் பீடாதிபதிகள் தேவையில்லை என்பதை உணர்த்துகின்றன சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் நூலை முன் வைத்து .சே இளவேனில் ( புலிவாலை பிடித்த கதைகள் சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் தொகுப்பு நூல் தொகுப்பு பொன் குமார். அந்த நூலை முன்வைத்து தமிழ் இந்து இதழில் எழுதி இருப்பது’’ .இவர்களின் கூற்றுகள் மூலம் திருப்பூர் சார்ந்த இயற்கை சிதைவுகள்எப்படி நிகழ்ந்துள்ளன அன்று தன் நாவல்களில் விவரிப்பதன் மூலமாக சுப்ரபாரதிமணீயனின் சாயத்திரை, புத்துமண், வெப்பம் ஆகியவை சுற்றுச்சூழல் படைப்புகளாக விளங்குகின்றன.. ( சுய அறிமுகமாய் இக்கட்டுரை தொகுப்புதிவ்யா பி ., ஆய்வாளர் )
Pesum puthiya sakthi june 2025 நீடித்த இயற்கை சூழல் என்பது கனவா ..சுப்ரபாரதிமணியன் நீடித்த இயற்கை சூழல் என்பது பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் . திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் 2020 பிப்ரவரியில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.பின்னலாடை துறையில் வெளியேறும் சாயக்கழிவுகள் பற்றிய விமர்சனங்கள் எப்போதும் உண்டு .ஆனால் அவர்கள் அந்த கழிவுகளை சார்ந்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இப்போது நாம் பயன்படுத்திய பழைய போத்தல்களை பயன்படுத்தி சட்டை தயாரிக்கும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வீசி எறியும் தண்ணீர் போத்தல்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவற்றின் மலைத் தன்மை போன்றவை நம்மை எப்போதும் பயமுறுத்தும். அந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து அதிலிருந்து பைபர் நூலை பிரித்து பின்னலாடை துறையில் பயன்படுத்த இரண்டு நிறுவனங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் .ஒன்று சுலோச்சனா நிட் என்ற ஒரு நிறுவனம். இன்னொன்று சிண்டிகேட் இம்பெக்ஸ். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை முன்வைத்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் தண்ணீர் போத்தல்களில் இருந்து பைபர் நூலை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பின்னர் ஆடைகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள் .அது ஆஸ்திரேலியாவின் உலக ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட உள்ளது .இந்தப் போட்டியின் போது பந்துகளை சேகரிக்கும் தரும் சிறு பையன்கள் பயன்படுத்துகிற பின்னலாடை ஆகியுள்ளன. இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக மாறியுள்ளன .உலகத்தில் முதல் முயற்சி இது .அந்த டீ சர்டுக்களை அடிக்கடி துவைக்க வேண்டியது இல்லை . திடக் கழிவை பின்னலாடை துறை டீ சர்டுக்களை மாற்றியிருக்கிறார்கள்.அது ஒரு சாதனை .திருப்பூரில் நிகழ்ந்திருக்கிறது திடக்கழிவுகள் என்று வந்துவிட்டாலே அவற்றை மறுப்பது குறைப்பது மறுபயன்பாடு செய்வது மறுசுழற்சி செய்வது என்பவை முக்கியமாக இருக்கின்றன. ஒரு லிட்டர் கொக்ககோலா தயாரிக்க 60 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. இரண்டு டம்ளர் அரிசியை வேக வைக்க வெவ்வேறு முறைகள் என்று வருகிறபோது 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்கான தண்ணீர் மறைநீர் தண்ணீர் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய கழிவுகளில் வீட்டுக்கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகள் முக்கியம் ஆகும் .டன் கணக்கில் இவை வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கான முயற்சிகள் குறைவாகவே இருக்கின்றன .நண்பரொருவர் போபால் எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியை குறிப்பிட்டார் .போபால் விஷவாயு சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சி. ஒரு தொடர்வண்டி பயணிகளுடன் சென்று கொண்டிருக்கிறது .போபால் பகுதியில் ஒருவர் சிரமப்பட்டு அந்த விஷ வாயுவை சுவாசித்து உடல் தள்ளாட ஒரு கொடி ஒன்றை காட்டி அந்த வண்டியை நிறுத்துகிறார். அந்த வண்டி விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்வதை தடுக்கிறார். அவர் விசவாய்வு தன்மையால் மயங்கி விடுகிறார் .பக்கத்திலேயே எந்த அடையாளமும் கிடைக்காத இன்னொரு தொடர்வண்டி போபால் விஷவாயு பகுதிக்குள் போகிறது. ஒரு பக்கம் கழிவு சார்ந்து ஏதாவது நடக்கிறது. எப்படி முடிகிறது .இப்படித்தான் அறிவு சார்ந்த விஷயங்களால் ஏதோ ஒரு பகுதியில் எச்சரிக்கையோடு நிறுத்தினால் இன்னும் பல பகுதிகளில் அது திரும்பத் திரும்ப வேறு விதங்களில் வந்து கொண்டிருக்கிறது .சமீபத்தில் மருத்துவ கழிவுகளை வளரும் நாடுகளில் கொண்டு வந்து கொட்டி இன்னும் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் . திருப்பூருக்கு அருகில் கடல் ஏதாவது இருந்தால் திருப்பூர் 2020ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியசெலவாணி இலக்கை அடைந்திருக்கும் என்றார் நண்பர் ஒருவர்,. கடலில் திடசாயக்கழிவுகளை சுலபமாக வெளியேற்றி விடலாம். பல சிரமங்கள் , சுத்திக்கரிப்பு நிலையம் பல கோடி செலவு செய்து ஏற்படுத்துவது போன்றவற்றைத்தவிர்க்கலாமே. 2020 இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல்கலாமின் கனவு போல் 2020 ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்பது திருப்பூர் பின்னலாடைஏற்றுமதியாளர்களின் கனவாக கடந்த 5 ஆண்டுகளில் இருந்தது. கை கூடவில்லை. ஓர் அடி முன்னால் இரு அடி பின்னால் என்கிற மாதிரி ஆகிவிட்டது தற்போது என்றார் ஒரு நண்பர் . மீத்தேனை விட அபாயகரமானது சமையல் வாயு. அதிக விசத்தன்மை கொண்டது. சகாய விலை , மான்யம் என்பதால் சமையல் வாயுவை யாரும் எச்சரிக்கையாக, அக்கறை எடுப்பதில்லை. இலவசம் என்று வந்து விட்டால் சலுகைதான் மரணத்திற்கும் என்றார் நண்பர்.மீத்தேன் தான் கண்களுக்குத் தெரிகின்றன. மூட்டை மூட்டையாய் கொட்டிக்கிடக்கும் திடக்கழிவுகள் பல சமயங்களில் சோற்றில் மறைந்த பூசிக்காயாய் இருக்கின்றன. பல சமயங்களில் நாம் என்சைம் என்பதையும் எச்சில் என்பதையும் பலவாறு போட்டு மனதில் சமைத்து பார்க்கிறோம் .ஒருவகையில் இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தை தான் தருகின்றன .காரணம் அவை இரண்டும் திடகழிவு என்பதில் உடைய வெவ்வேறு ரூபங்களாக இருக்கின்றன. இதிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்வது அழகுபடுத்துவது ஒரு கலையாக உலகம் முழுக்க இன்று வளர்ந்து வருகிறது அந்தக் கலைக்கு வளம் சேர்க்கும் வகையில் பல கலை பொருட்கள் உலகம் முழுவதும் இன்று வரை கொண்டிருக்கின்றன ஆனால் அவை விஷத்தன்மை நீக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. . இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக மாறியுள்ள விசயமும் இப்படித்தான் .
New Centuary Book publishers, Tiruppur நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் திருப்பூர் புதிய பேருந்து நிலையம்.. வணக்கம். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் “ உங்கள் நூலகம் “ஜீன் மாத இதழில் வேரல் பதிப்பகம் வெளியிட்ட, சேலம் பொன் குமார் தொகுத்த “ திருப்பூர் சிறுகதைகள் “ ” நூல் பற்றிய அறிமுகத்தை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ளார். அந்த நூலில் தங்கள் சிறுகதை இடம்பெற்றுள்ளது. அதை எழுதிய தங்களைப் பாராட்டுகிறோம். உங்கள் படைப்புப் பயணம் தொடர வாழ்த்துகிறோம். தொடர்ந்து தங்களின் இலக்கியப் பயணத்தின் மூலம் சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம். உங்களைப் போன்றோரின் நூல்களை விற்பனை செய்யவும்,தங்கள் நூல்கள் விற்பனையிலும் வெளியீட்டிலும் பங்கு பெறவும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் விரும்புகிறது. உங்கள் இலக்கியப்பணி தொடர வாழ்த்துகிறோம். உங்கள் நூலகம் மாத இதம் ஆண்டுச்சந்தா ரூ540. அன்புடன், குணசேகரன் ( நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் )(8098426515) ராமசாமி ( நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் ( 9363044117 ) திருப்பூர் சிறுகதைகள் Thiruppuu sirukathaikal : veral books 01. ஒருவர் உள்ளம் - திருப்பூர் கிருஷ்ணன் 02. அப்பா - சுப்ரபாரதி மணியன் 03. கிணற்றில் குதித்தவர்கள்- என். ஸ்ரீ ராம் 04. அரூப நெருப்பு - கே. என். செந்தில் 05. . மனப்பொருத்தம் - தி. குழந்தைவேலு 06. அரசாங்கம் - தாண்டவக்கோன் 07. அப்பாவின் நிழல் - ரத்தினமூர்த்தி 08. திருவினை - உடுமலை கி. ராம் கணேஷ் 09. பெண் வலிமையானவள் - ரா. தீபன் 10.அறிமுகம் - அழகு பாண்டி அரசப்பன் 11 ஏ. டி. எம். - அம்பிகா குமரன் 12. முக்கோணம் - அ. இளஞாயிறு 13. மன்னிப்பு - சிவதாசன் 14. கிடா விருந்து - எஸ். ஏ. காதர் 15.நானறிந்த காதல் எழுதப்பட்ட கதை - ஆ. அருணாச்சலம் 16. உயிர்க் கொல்லி கிளர்த்திய ( அறிவுப்) பசி - ஆர். செம்மலர் 17. டயர் வண்டி - வெண் புரவி 18. தக்காளி - பிரபாகர் 19. இயலாமை - முத்துபாரதி 20. பள்ளிக்கூடத்திற்கு அப்பால் - த. குணசுந்தரி 21 பெருசு - முரளி குமார் 22. செத்தவன் - இரா. சிந்தன் 23. பிரிவினை - சாமக்கோடாங்கி ரவி 24. வென்றே தீரும் அஹிம்சை - த. மஞ்சு 25. சந்தையான பள்ளிக்கூடம் - கோம்பை மணிகண்ட
புலி மனிதர்: சுப்ரபாரதிமணியன் அந்த புலி மனிதரை திருச்சூர் திரைப்பட விழா படமொன்றின் மூலம் அறிந்தேன். புலிகளின் தேசம் என்ற படமே அவரை அறிமுகப்படுத்தியது. அந்தப்படம் புலிகளின் களம், புனித நீர், தெரியாதக் கடல், பாலைவன் ராஜ்யம்,கடவுள்களின் மலைகள், பருவ மழைக்காடுகள் ஆகிய பகுதிகளைக்கொண்டிருந்தது, இந்தியாவின் இயற்கை சரித்திரங்களின் ஒரு பகுதியானார் அவர். இமாலயம் முதல் இந்தியாவைன் காடுகளில் அலைந்தவர்.முதல் பாகப் படத்தில் குஜராத்தில் வங்காளப்புலி ஒன்று குட்டிகளுடன் வாழ்வதையும் அதன் வேட்டை லாவகங்களையும் பற்றிச் சொல்கிறார். வேட்டையிலும் தோல்விகள் இருக்கும் என்பதைச் சொன்னவர் தன் வாழ்க்கைத் தோல்விகளையும் பற்றிச் சொல்கிறார்.கங்கை பிரம்மபுத்திரா பகுதி காட்டுவாழ்க்கையை நுணுக்கமாகச் சொன்னார் இதில். புலிகளுடன் வாழ்தல் (Living with Tigers), புலிகளின் அந்தரங்க வாழ்வு (The Secret Life of Tigers), புலி கனல்: இந்தியாவில் புலிகளின் ஐந்நூறு ஆண்டு வரலாறு (Tiger Fire: 500 Years of the Tiger in India) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அறிவியல் தகவல்களை கதை வடிவில் உணர்வு பூர்வமாக தரும் ஆற்றல் மிக்க எழுத்து வல்லமை கொண்டவர். இவர் இயற்கைப் பாதுகாப்பு குறித்து 30 புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார். தாப்பர், 1959ஆம் ஆண்டில் செமினார் எனும் அரசியல் இதழை நிறுவிய ராஜ் தாப்பர், புகழ்பெற்ற பத்திரிகையாளரும் அரசியல் வர்ணனையாளருமான ரோமேசு தாப்பர் ஆகிய இணையரின் மகனாக மகாராட்டிர தலைநகர் மும்பையில் பிறந்தார். புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் இவரது அத்தை ஆவார். வால்மிக் தாப்பர் இந்தியாவின் புலிகளின் குறித்து தனது ஆய்வினைப் பல தசாப்தங்களாக தொடர்ந்தார். இவர் பதேக்சிங் இரத்தோரால் ஈர்க்கப்பட்டார் ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசிய பூங்காவில் உள்ள புலிகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தாபரின் பெரும்பாலான களப்பணிகள் ராஜஸ்தானை மையமாகக் கொண்டிருந்தன, அத்துடன், மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார் இரணதம்பூர் அறக்கட்டளை இவரது பணியினை அங்கீகரித்து தலைமைப் பொறுப்பை வழங்கியது. இவர் 2005-ஆம் ஆண்டு புலிகள் பணிக்குழுவில் உறுப்பினராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். புலிகள்-மனிதர்களின் சகவாழ்வின் வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்துவதாக தனது கருத்து வேறுபாடு குறிப்பில் பெரும்பான்மை பணிக்குழுவின் பார்வையை இவர் விமர்சித்தார், இது இவரது பார்வையில் குழுவின் நோக்கத்துடன் ஒத்துப்போகவில்லை. 1973-ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம்தோல்வியடைந்ததாக இவரது பகுப்பாய்வுகள் தெரிவித்தன.[8] பெரும்பாலும் அறிவியல் ரீதியாகப் பயிற்சி பெறாத வன அதிகாரிகளின் தவறான மேலாண்மை குறித்து கவனத்தை ஈர்த்த இவர், புலிகள் திட்டத்தினை விமர்சித்தார். இவரது கடைசி புத்தகமான தி லாஸ்ட் டைகர் (ஆக்சுபோர்டு யுனிவர்சிட்டி பிரசு) இந்த கூற்றினை வலுவாக கூறுகிறது. இந்தியாவின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் மீது தாப்பர் தொடர்ந்து விமர்சித்ததில் ஒன்று ஆயுதமேந்திய ரோந்துப் பணிகளின் மூலம் வேட்டையாடுவதைத் தடுக்க இது விரும்பவில்லை என்பதும், அறிவார்ந்த அறிவியல் ஆய்வுகளுக்கு காடுகளில் அனுமதி இல்லை என்பதும் மையக் கருத்தாகும். 'மச்ச்லி' என்ற புலியுடனான புகழ்பெற்ற உறவு இவரது சில வரலாறுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தாப்பரின் மிகவும் நேசத்துக்குரிய புலிகள் பிபிசி ஆவணப்படமான மை டைகர் ஃபேமிலியில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. 0 திருப்பூர் சிறுகதைகள் Thiruppuu sirukathaikal : veral books 01. ஒருவர் உள்ளம் - திருப்பூர் கிருஷ்ணன் 02. அப்பா - சுப்ரபாரதி மணியன் 03. கிணற்றில் குதித்தவர்கள்- என். ஸ்ரீ ராம் 04. அரூப நெருப்பு - கே. என். செந்தில் 05. . மனப்பொருத்தம் - தி. குழந்தைவேலு 06. அரசாங்கம் - தாண்டவக்கோன் 07. அப்பாவின் நிழல் - ரத்தினமூர்த்தி 08. திருவினை - உடுமலை கி. ராம் கணேஷ் 09. பெண் வலிமையானவள் - ரா. தீபன் 10.அறிமுகம் - அழகு பாண்டி அரசப்பன் 11 ஏ. டி. எம். - அம்பிகா குமரன் 12. முக்கோணம் - அ. இளஞாயிறு 13. மன்னிப்பு - சிவதாசன் 14. கிடா விருந்து - எஸ். ஏ. காதர் 15.நானறிந்த காதல் எழுதப்பட்ட கதை - ஆ. அருணாச்சலம் 16. உயிர்க் கொல்லி கிளர்த்திய ( அறிவுப்) பசி - ஆர். செம்மலர் 17. டயர் வண்டி - வெண் புரவி 18. தக்காளி - பிரபாகர் 19. இயலாமை - முத்துபாரதி 20. பள்ளிக்கூடத்திற்கு அப்பால் - த. குணசுந்தரி 21 பெருசு - முரளி குமார் 22. செத்தவன் - இரா. சிந்தன் 23. பிரிவினை - சாமக்கோடாங்கி ரவி 24. வென்றே தீரும் அஹிம்சை - த. மஞ்சு 25. சந்தையான பள்ளிக்கூடம் - கோம்பை மணிகண்டன் ReplyForward Add reaction
Uyirezuthu june 2025.. சுப்ரபாரதிமணியன் நாவல் குமாரகேசனின் வெட்டுக்காடு மருதகாளி நாவல் நாவல் குமாரகேசனின் நாவல் நம்நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் காலகட்டத்தில் நடப்பதாக அமைந்திருக்கிறது.பழனி, ஒட்டச்சத்திரம் சார்ந்த சில பகுதிகள் இந்த நாவலின் களங்களாயிருக்கிறன. பழனி ஒட்டன்சத்திரம் அதை சுற்றியுள்ள ஊர்களின் சாதாரண மக்கள் இந்த நாவலின் கதாபாத்திரங்களாக ஆகியிருக்கின்றனர்.. ஒரு மலைக்காட்டுப் பகுதி இரண்டு முறை எரிக்கப்பட்டு உயிர்கள் சிதைக்கப்பட்டு நிலமும் பொருட்களும் எரிந்து சாம்பலாகி கால்நடைகளும் இறந்து போக அங்கே குடியிருப்பவர்கள் அந்த நிலத்தை விட்டு வெளியேறுவதும் மீண்டும் மீண்டும் அங்கேயே தொடரும் வாழ்க்கையும் என்று தொடர்கிறது ..அந்த சிதைந்தப் பகுதி மையமாகியிருக்கிறது. ரத்தம் சிந்தாத மண்ணும் இல்லை. வஞ்சிக்கப்படாத மனிதரும் இல்லை என்று பல மனிதர்களின் துரோகம், அவர்களின் வரலாற்றை சொல்கிறது. ஒரு வகையில் அதிகார மனப்பான்மை தான் மையம்.. ஒரு விதவைப்பெபண்ணின் மகளான மருதகாளி தவறுதலாக கடத்தப்பட்டு ஒரு இடத்திற்கு கொண்டுவரப்படுகிறாள் அந்த பகுதி கொள்ளைக்காரர்கள் மூலம் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாகிறது. காவிரி கரையில் சார்ந்தவன் ஊரை விட்டு வெளியே வந்து வாழ்க்கை நடத்துகிறான் சிவன்மலை. இன்னொரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறான். அந்தப் பகுதியில் வாழ்ந்த கொள்ளைக்காரர்களான தீவட்டியான், பாண்டிகூத்தன் இருவரின் செயலைப் பற்றி இந்த நாவல் அதிகம் பேசுகிறது. அந்த காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பும் விவசாய நிலங்களின் தன்மை பற்றியும் அதிகம் பேசப்படுகிறது.அது சார்ந்த விவசாயின் ஆழ்ந்த பார்வையும் ஆச்சர்ய்படுத்துகிறது பொள்ளாச்சி ஆழியாறு பழனி நடைஉலாவாக களன் படைக்கப்பட்டிருக்கிறது மாசாணி அம்மன் கதையும் ஒட்டன்சத்திரத்தின் பூர்வீகமும் வந்து போகிறது. . நிலமோ சொத்து சுகமோ இல்லாதவன் திருட்டை தான் அறுவடை செய்ய வேண்டும் என்று பலர் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள் அவருடைய கட்டாயதிருட்டு வாழ்க்கையும் இந்த நாவலில் சொல்லப்படுகிறது. கொடுமுடி குருநாதர்,அந்த பகுதி ஜமீன் ஆயுத வழக்கும் தற்கொலை முயற்சிகளும் விரிவாக நாவலில் வருகிறது. நாவலின் காட்டப்படுகிற பகுதிகளும் மக்களின் இயல்புகளும் வெகு இயல்பாக சொல்லப்படுகின்றன புளிச்சோறு ரேகை பற்றிய வர்ணனை ஒரு உதாரணம். வண்டி ஒட்டு மனிதர்கள் சுமூகமாக தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் சந்திக்கிற பல சிரமங்களை நாவல் சொல்கிறது. திருடர்கள், திவட்டிக்கொள்ளையர்கள் வந்து போகிறார்கள். . காட்டு விலங்குகளும் வீட்டு விலங்குகளும் அவற்றின் குணாசம்களுடன் கூர்மையாக பழைய காலத்து ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுடைய வாழ்க்கையுடன் சொல்கிறபோது வியப்பாக இருக்கிறது. . பல மூத்தவர்கள் இந்த சம்பவங்களை நினைவு கூறுவார்கள் அவர்களின் மனித கலாச்சாரம் நம்பிக்கைகளும் பாரம்பரிய கதைகளும் கொண்டிருப்பதை இந்த நாவல் சொல்கிறது .அப்பகுதி மக்களின் வாழ்க்கை விரிவாக இதில் உள்ளது வடகாட்டு மலைக்கு சென்று காடுவெட்டி பயிர் தொழில் செய்து விடுவர்களை சந்திக்கிறார்கள் துன்பவியல் சம்பவங்களை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் இந்த மண்ணில் மனிதர்கள் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் இந்த நாவல் சொல்கிறது. அவர்கள் நிலத்தை வளப்படுத்தினார்கள். கானகப் பொருட்கள் உணவாகின. நிலத்தைக் கெடுக்கவில்லை. மரங்களை வெட்டவில்லை. ஆனாலும் அவர்கள் விரட்டப்படுகிறார்கள் கொங்கு நாட்டு மக்களுடைய வாழ்க்கை முறையும் தினசரி வாழ்க்கையும் விரிவாக சொல்லப்படுகிறது சமையல் பாத்திரத்தின் மீது கல்மாரி விழுகிற சத்தம் சரியாக கேட்பது போல் இந்த பகுதி மக்களின் அனுபவங்களும் தனித்துவமாக இருக்கின்றன .காட்டுப் பகுதியில் உள்ள வெவ்வேறு வகையான மரங்களும் செடி கொடிகளும் அதன் மருத்துவ குணம் மற்றும் அவற்ற அவற்றின் பயன்பாடுகள் நிறைய வந்து போகின்றன மண் குதிரை அசைந்தது கல்மாரி விழுந்ததால் என்று சொல்ல முடியவில்லை என்று சொல்கிறார் /அதேபோல இந்த மக்களின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் எழுச்சியாக நடந்ததா என்று சொல்ல முடியாது. ஆடி காற்று காலம் திருட்டுக்கு எப்படி உகந்ததாக இருக்கிறது அந்த காலத்தில் நாய்களின் மோப்பசக்தை குறைவாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்ற தகவல்கள் நாவல் முழுக்க இருக்கின்றன. மரம் வெட்டி கரி வண்டி ஓட்டும் வாழ்க்கை, உப்பு வண்டி ஓட்டும் வாழ்க்கை என்று பல சகோதரர்களும் வருகிறார்கள். ஆள்மாற்றத்தால் மலையில் வந்து சேரும் மருதகாளி வாழ்க்கை கண்ணாமூச்சி வாழ்க்கையாகிறது இந்த அனுபவங்களை நேர்த்தியாகவும் தன்னுடைய கொங்கு அனுபவ வார்த்தைகளோடும் நாவல் குமாரகேசன் சொல்கிறார் பிரிட்டிஷ் ஆட்சி கால சம்பவங்களால் நிறைந்திருக்கிறாய் இந்த நாவல் அந்த காலகட்டத்தில் சரித்திரச் சான்றுகளுடன் சொல்கிறது. புனைவும் கூட. இரண்டும் கலந்து அடையாளம் காட்டுகிறது மனிதர்களை. சொந்த நிலம் இல்லாத எளிய மக்கள் வேலை வாய்ப்புக்காக வடகாட்டு மலைக்கு செல்வதும் அங்கு விவசாயத்பைல் தொழில் செய்வதும் வனக்காவலர்களால் விரட்டப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மிரட்டலுக்கும் நடுவில் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என்ற கொஞ்சம் குறிப்பையும் வைத்துப் போகிறது. இன்னும் பக்கங்கள் நீண்டு போய் சமீபகால அனுபவங்களோடு இந்த நாவல் முடிவு பெற்றிருந்தால் வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கும். . வெட்டுக்காடு திரும்பத் திரும்ப அழிக்கப்பட்டு அதில் குடியேறுகிற மக்களின் வாழ்க்கையும் விவசாயிகளின் நிலமையும் ஒட்டஞ்சத்திரம் துண்டுப் பகுதி சார்ந்து சரியாக சொல்லப்பட்ட ஒரு கொங்கு நாவல் என்ற பெருமையை இது பெறுகிறது ( பக்கங்கள் 794.. ரூபாய் 750 அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை ) சுப்ரபாரதிமணியன் 0
பெறுநர் தமிழக முதலமைச்சர், சென்னை வணக்கம்.10/6/25 அன்று தாங்கள் காணொலியில் சுமார் 80 நூலங்களைத் திறந்து வைத்த்து மகிழ்ச்சி தருகிறது. அதில் இரண்டு திருப்பூர் சார்ந்தவை. அதில் ஒன்று திருப்பூர் மத்தியப் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும், வந்து செல்லும் பயணிகள் மற்றும் பயன்பாட்டிற்கான ஒன்றும் என்பது மகிழ்ச்சியானது. மேட்டுப்பாளையத்தில் உலக சிந்தனையாளர் மையம் என்ற நூலகம் பழமையானது. பழைய அபூர்வமான நூல்களும் , திராவிட இலக்கிய பொக்கிசங்களும் கொண்டது. மேட்டுப்பளையத்தின் முதல் தி மு க சட்டமன்ற உறுப்பினர் அமரர் தூயமணி அவர்களின் இல்லத்தில்பல ஆண்டுகளாக செயல்பட்ட நூலகம் இப்போது பயன்பாடின்றிக் கிடக்கிறது. அதை அரசு எடுத்துக் கொண்டு இன்னொரு கூடுதல் நூலகமாக மேட்டுப்பாளையத்திற்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அன்புடன், சுப்ரபாரதிமணியன் , எழுத்தாளர் திருப்பூர்.9486101003 சுப்ரபாரதிமணியன் 27 நாவல்கள் உட்பட 125 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன். சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது, மொழிபெயர்ப்பாளர் விருது இரண்டு லட்சம் தொகையுடன் உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்: 2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது. இவரின் 1000 பக்க நாவல் “ சிலுவை “ சமீபத்தில் வெளிவந்துள்ளது NCBH . சிலுவை நாவல் இவ்வாண்டின் எஸ் ஆரெம் தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் பெற்றுள்ளது. இவரின் 10 சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன ( அயலான் இயக்குனர் ரவிக்குமார், பேரெழில் குமரன் உட்பட பலரின் இயக்கத்தில் அந்தக்குறும்படங்கள் வந்துள்ளன ).இவரின் இயக்கத்தில் வந்த குறும்படம் “ நாணல் ”. 5 திரைப்பட நூல்கள் வெளியிட்டுள்ளார், இதைத் தவிர 8 திரைக்கதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார்.கனவு இலக்கிய இதழை 39 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கனவு திரைப்பட சங்கத்தையும் நடத்தி வருகிறார்.திரைப்பட சங்க கூட்டமைப்பின் ரீஜினல் கவுன்சில் உறுப்பினர். பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கு பெறுகிறார். 0 இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் நாவல், நாடகம் ஒவ்வொன்றும் சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை . இவரின் கட்டுரைத் தொகுப்புகளில் சுற்றுச்சூழல், திரைப்படக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என் 35 நூல்கள் அடங்கும். இவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நூல்கள் அதிகம் விற்பனையான நூல்கள். கவிதை நூல் ஒன்றும், நாடக நூல் ஒன்றும் இவரின் 125 நூல்களில் அடங்கும். 0 இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் , நாடகம் ஒன்றும் நாவல், சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை நாவல்கள் .. வெப்பம், கொரானா தடுப்பூசி சிறுகதைகள் : அன்பே உலகம், சிந்திக்க வைக்கும் சிறுவர்கதைகள் நாடகம் : பசுமைப்பூங்கா.. SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன் 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199 --------------------------------------------------------------------------------------------------------------------------------FB kanavu subrabharathimanian tirupur Subrabharathimanian palaniasamy
தமிழ் இலக்கியங்களில் சூழலியல் – மேலாண்மை சிந்தனைகள் சுப்ரபாரதிமணியன் இயற்கை சார்ந்த விசயங்களை மனதில் கொள்வதும் அதை விவரித்துக்கொள்வதும் மட்டுமே சுற்றுச்சூழல் படைப்புகள் என்ற பிரிவு, அக்கறைக்குள் வருவதில்லை. இயற்கையை, அதன் சமநிலையைக் குலைக்கும் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதாலேயே கூட சில படைப்புகள் அவை சுற்றுச்சூழல் படைப்புகள் ஆகின்றன என்று மேற்கத்திய சுற்றுச்சூழல் வாதிகள் சமீபத்தில் எழுதிய பல ஆய்வுகளும் தரவுகளும் சொல்கின்றன அந்த வகையில் தமிழ் இலக்கியப்படைப்புகளில் இடம் பெற்றிருக்கும் சுற்றுச்சூழல் அம்சங்கள் பற்றி இந்த நூலின் கட்டுரைகள் சொல்கின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் பழைய இலக்கியங்களும் அவை வெளிப்படுத்தும் சுற்றுச்சூழல் இயற்கை சார்ந்த விஷயங்களும் மனதில் வந்து கொண்டே இருக்கும். பல இலக்கியங்கள் இயற்கையையும் அதன் வலிமையும் சொன்ன இயற்கையை பற்றி விரிவாக சொல்லாமல் தமிழ் சமூகம் பற்றி இலக்கியம் சென்றதில்லை. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு துவங்கி பல இலக்கியப் படைப்புகள் அப்படித்தான் இருக்கின்றன. தமிழில் திணை என்று இருப்பதும் அவற்றின் தனி அடையாளமாக மரம்., பறவை, விலங்கு, பூ, சிறு தெய்வம் என்ற இருப்பதும் இதற்கு வலு சேக்கிறது பழைய இலக்கியங்களில் காணப்படும் சமூக வாழ்க்கை உன்னதமாக இருப்பதாக தோன்றுவதன் காரணம் அப்போதைய சுற்றுச்சூழல் விஷயங்களும் இயற்கை சார்ந்த விஷயங்கள் மனித வாழ்க்கைக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. காரணம் இயற்கையை சிதைக்காமல் வழிபடும் தன்மை அப்போது இருந்திருக்கிறது. இன்று விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் வளர்ந்து இயற்கையை கேடுகளை தருகிற போது பல வகைகளில் அந்த வகை இலக்கியங்கள் ஆறுதலாகத்தான் இருந்திருக்கின்றன. அந்த ஆறுதலை இந்தக் கட்டுரைகளில் நாம் அடையாளம் காண இயலும். பல்வேறு சுற்றுச்சூழல் அம்சங்களை இவை ஆராய்கின்றன. இலக்கியம் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கிறது அவை சமகாலத்தோடும் பயணிக்க வேண்டும் என்பது தான் முக்கியம் பலவகை விஷயங்களை பற்றி இலக்கியங்களில் பேசுகிறோம் கிராம வாழ்க்கை, வறுமை, பிற்பட்ட மக்களின் வாழ்க்கை என்று பல விஷயங்கள் பல்வேறு இலக்கிய வகையில் சொல்லப்படுகின்றன, அதை தாண்டி சுற்றுச்சூழலை பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது, இந்த சுற்றுச்சூழல் சார்ந்த இலக்கிய விஷயங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி விட முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் இலக்கிய படைப்புகளில் இவை தரப்படுகிறது. அவை தரும் மாற்றங்களை நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். நாம் இயற்கையை கண்டு பயப்பட ஆரம்பித்து விட்டோம் அது தந்த பல எச்சரிக்கைகளும் பலனில்லாமல் போய்விட்டன. அந்த எச்சரிக்கைகளை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன அது இப்போதைக்கு காலநிலை மாற்றத்தையும் மோசமான வாழ்க்கையும் கொண்டு வந்து விட்டது. அதனால் மக்களை இடம்பெறச் செய்து விட்டது இந்த சூழலில் இந்த இடம் பெயரும் வேதனையையும் இயற்கைக்கான பாதிப்புகளையும் இக்கட்டுரைகள் சொல்கின்றன. பழைய இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை இதன் அத்தாட்சியாக விளங்கும் படைப்புகளை இந்த கட்டுரைகள் இரு தொகுப்புகளாக அமைந்து காட்டுகின்றன. இயற்கை பற்றி யோசிப்பதற்கும் நுகர்வு கலாச்சாரத்தின் அதீத தன்மை பற்றிச் சொல்வதற்கும் இந்த கட்டுரைகள் பயன்படுகின்றன. அரசியல் தத்துவ விஞ்ஞான ரீதியான படைப்புகளை தாண்டி பல்வேறு சூழலில் சூழலியல் பாதுகாப்பு சார்ந்த அக்கறை முன்வைக்க விழிப்புணர்வு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறன .ஒரு படைப்பின் வெற்றி என்பது அது மக்களுக்கும் விழிப்புணர் ஊட்டவும் வாசல்களைத் திறந்து வைக்க வேண்டும். அந்த விஷயங்களில் சிந்தனைகளை மனக் களத்தில் கொண்டு செல்லவும் ஆழ்மனதில் பல துன்பங்களை உருவாக்கவும் பயன்படுவதாகும். அப்படித்தான் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் பயன்படுகின்றன. அதற்கு தமிழின் சில சாத்தியங்களும் உதவுகின்றன. இப்போதைய காலகட்டத்தில் எழுத்தும் சொற்களும் பேச்சை விட காட்சிகளாகச் சொல்லப்படும் தன்மை என்பது முக்கியமாக இருக்கிறது. அந்த தன்மைக்கு இந்தப் படைப்புகளும் பயன்படுகின்றன அவையெல்லாம் காட்சிகளாக கூடவே வருகின்றன என்பதும் முக்கியம் முழுக்கக் கல்வித்துறையினரின் இந்தப் பங்களிப்பு புருவங்களை உயர்த்த வைக்கிறது.சூழலியல் சார்ந்த பன்னாட்டு ஆய்வு மாநாட்டின் கட்டுரைகள் 1200 பக்கங்களில் இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெளியீடான் இத்தொகுப்புகள் சூழலியல் சார்ந்த முக்கிய ஆவணங்களாக இத் தொகுப்பின் மூலம் விளங்குகின்றன. சுப்ரபாரதிமணியன் 9486101003
Ungal noolakam ..june 2025-06-19 திருப்பூர் சிறுகதைகள்/ சுப்ரபாரதிமணீயன் தொகுப்பாசிரியர் : பொன் குமார் விலை ரூபாய் 300 ( 95787 84322 ) தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் கதைகளை மாவட்ட வாரியாக தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறார் சேலம் பொன் குமார் அவர்கள். உழைப்பும் பணச் செலவும் கொண்டது. பெருமை கொள்ளத் தக்கது. இந்த்திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பை பொன் குமார் சிறப்பாக தொகுத்து அளித்திருக்கிறார். இந்த தொகுப்பை ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அதை தவிர ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் நாடக முடிவு என்ற சிறுகதை கூட உள்ளது. அவரின் முத்திரையும் கொங்கு பிரதேச வாழ்க்கையும் எளிமையான காதல் வாழ்க்கையும் சொல்கிற கதை .. 0 அம்பிகா குமரன் கதை திருப்பூர் சென்னை என்று இரண்டு தளங்களில் பயணப்படுகிறது குடும்ப சூழ்நிலையில் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறுவது என்று நுணுக்கமான சில விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார். கடைசியில் அலைகள் வந்து கரைதொட்டு செல்லும். என்று அலைகள் வித்யா மனதிலும் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்குகிறது வித்தியா கண்ணீரால் கணவனை திட்டத் தொடங்கியிருந்தாள் என்று முடிகிறது இந்த கதை அப்படித்தான் மனதில் அலையாய் வந்து அடித்துக் கொண்டிருக்கிறது. 0 இத்தொகுப்பில் உள்ள பெண் வலிமையானவள் என்ற கதை எழுதி இருக்கிறார் தீபன். பத்திரிகையாளர் புகைப்பட கலைஞர் கவிதை தொகுப்பு வெளியிட்டு இருக்கிறா.ர். வழக்கமாக அவருடைய கதைகளில் விளிம்பு நிலை மக்களும் தாழ்த்தப்பட்ட சாதி சார்ந்த மக்களும் இருப்பார்கள். இக்கதையிலும் பெண்களின் வாழ்க்கை பல்வேறு மடங்கு வறுமையும் பாலியல் சீண்டலும் சமூக சூழ்நிலையால் புறக்கணிக்கப்பட்டதும் என்று இருப்பதை பல சம்பவங்கள் மூலமாக காட்டுகிறார். அது அவரின் தனித்துவத்திற்கு இந்த ஒரு கதை.சான்று 0 ரத்தினமூர்த்தி அவர்களின் அப்பாவின் நிழல் கதை திருப்பூர் சூழலில் மையமாகக் கொண்டிருக்கிறது. திருப்பூரின் வேலை சூழலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு இன்மையும் பற்றியும் பேசுகிறது ஆனாலும் எனக்காக இந்த வாசல் எப்போதும் திறந்து இருக்கட்டும் என்ற நம்பிக்கையோடு முடிக்கிறார். அவரின் ஒரு சிறுகதை தொகுப்பு இந்த தலைப்பில் உயிர் மெய் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறார்கள் ) 0 குழந்தைவேல் அவர்களின் படைப்புகள், நாவல்கள் தொடர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டியவை என்பது முக்கியம் இவர் சமீபமான சில ஆண்டுகளாக சுயநினைவு இல்லாமல் வாழ்ந்து வருகிறார், 80 வயதிற்கு மேல் இருக்கும். ஆனாலும் அவருடைய நாவல்களில் வருகிற வால்பாறை மின் தொழிலாளர் பற்றிய பிரச்சனைகளும், பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கைகளும் மிகவும் நம்பிக்கை தருவது.இத்தொகுப்பின் கதையைப் போல. 0 ) இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கோதை மணியன், வெண் புரவி, குணசுந்தரி என்ற எழுத்தாளர்கள் பெயர்கள் கேள்வி படாத இருக்கிறது. 0 கிணற்றில் குதித்தவர்கள் என்ற என் ஸ்ரீராம் கதை குறிப்பிடத்தக்க கதை. கொங்கு பகுதி சார்ந்த நிலவியலை மிக அழகாக வழக்கமாக அவர் கதைகளில் கொண்டு வந்து விடுபவர் இந்த கதையில் வரும் கிணறு ஒரு படிமமாகவே மனதில் பதிந்து விடுகிறது அவரின் முத்திரையை அழுத்தமாக பதிந்திருக்கும் ஒரு கதை 0 இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் வீடு சுகந்திசுப்பிரமணியன் கதை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது இந்த கதை வெளிவந்த சமயத்தில் அசோகமித்திரன் அவர்கள் இந்த கதை பற்றி குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். வெகுவாகப் பாராட்டினார். பெண்ணின் இருப்பும் பாதுகாப்பின்மையும் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். பெண்ணுக்கு வீடு என்பது ஒரு பாதுகாப்பான இடம் வாடகை வீடு என்பது தவிர்த்து சொந்த வீடு கனவு என ஒரு பெண்ணுக்கு இருப்பதை இந்த கதை சொல்கிறது, 0 இரா.சிந்தன் சிறுகதை சிறப்பானது திருப்பூரில் ஒரு மழை பெய்த நாளில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த பலர் மதுபான கடையின் சுவர் இடிந்து விழுந்து இறந்து விட்டார்கள் அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு அந்த தொழிலாளர்கள் குடும்பங்களைப்பற்றியும் துயர சம்பவத்தையும் சிந்தன் அவர்கள் இந்த கதை விவரித்து இருக்கிறார். 0 சுப்ரபாரதிமணீயன், திருப்பூர் கிருஷண், கே என் செந்தில் உட்பட 28 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 0 திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பாசிரியர் பொன் குமார் விலை ரூபாய் 300 ( 95787 84322/ வேரல் புக்ஸ் சென்னை வெளியீடு